பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சங்க இலக்கியத்


“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
 குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ”
-நற்: 266 : 1-2

இருப்பினும் இதன் கிளைகள் ஓங்கி நீண்டு வளரும் எனவும், இதன் நீழலில் தனது குட்டியுடன் பெண்மான் இரலையுடன் வந்து தங்கும் என்றும், இதன் கிளைகளில் வதியும் குயிலினம் அங்கிருந்து கூவுமென்றும் கூறுமாறு காணலாம்.

“அரவ வண்டினம் ஊது தொறும் குரவத்து
 ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப”

-அகநா. 317 : 10-11

“சிறுமறி தழீஇய நெறிநடை மடப் பிணை
 வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
 அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய”

-அகநா: 304 : 8-10

“நின்நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண்”[1]
“.... .... .... .... .... .... .... அலரே
 குரவ நீள் சினை உறையும்
 பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே”
-ஐங்: 369 : 3-5

இம்மரம் கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளர்ந்து இளவேனிற் காலத்தில் அரவின் பற்களை ஒத்த அரும்பீன்று மலரும் என்பர்.

“ஓங்கு குருந்தொடு அரும் பீன்று பாங்கர் 
 மரா மலர்ந்தன”
[2]
“.... .... .... .... .... .... .... குரவு மலர்ந்தது
 அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்”
-அகநா: 97 : 16-17
“அரவு எயிற்றன்ன அரும்பு முதிர் குரவின்
 தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ
  குயில் குரல் கற்றவேனிலும் துயில் துறந்து”

-அகநா: 237  : 3- 5

“குரவம் மலர மரவம் பூப்ப
 சுரன் அணி கொண்டகானம்”
-ஐங்: 257 : 1-2

 

  1. திணைமா . நூ . 70 : 1
  2. திணை. மொ . ஐம்: 13