பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குருகிலை
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)

“குருகிலை மருதம் விரிபூங்கோங்கம்” என்றார். கபிலர் (குறிஞ்: 73). ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். சங்க நூல்களில் வேறுயாண்டும் இதனைப் பற்றிய செய்தி இல்லை. எனினும் குருகிலை, திணை மொழி ஐம்பது, கார் நாற்பது என்ற கீழ்க்கணக்கு நூல்களில்தான் பேசப்படுகிறது.

“அஞ்சனம் காயா மலர குருகிலை
 ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொள்
[1]

“அருவி அதிர குருகிலை பூப்ப
 தெரிஆ இன நிரைதீம்பால் பிலிற்ற
[2]

“முருகியம்போல் வானம் முழங்கி இரங்க
 குருகிலை பூத்தன கானம்.... ....
[3]

இவற்றால் இதனைப் பற்றி அறியக் கூடியவை :

  1. குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்
  2. இது முல்லை நிலத்தது .
  3. இது கார் காலத்தில் பூப்பது
  4. இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.

இதன் தாவரப் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் (Atalantia missionis) என்று கலைக்களஞ்சியம் குறிக்கிறது. இதன் தமிழ்ப் பெயர் ‘குருந்து’ என்று கூறுகின்றார் காம்பிள் (Vol: l: p. 114}. இவற்றைக் கொண்டு இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.

 

  1. திணைமொ. ஐ: 21 : 1-2
  2. திணமொ. ஐ: 30 : 1-2
  3. கா.நா. 27 : 1-2