பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



167

என்ற இக்குறிஞ்சிப் பாட்டின் அடியில் கூறப்படும் ‘செருந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘செருந்திப்பூ’ என்று உரை கண்டார்.

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பு, போது, மலர், இணர் இவை யாவும் குறிப்பிடப்படுகின்றன. மேலும், கலித் தொகையில் ‘செருந்தி’ வேறு பல மரங்களுடன் பேசப்படுகிறது. கோரைப்புல்லில் அரும்பு, போது, முதலியன இல்லையாதலின். செருந்தி என்பது ஒரு மரம் என்றும், ‘செருந்தி’ என்ற சொல் ஒரு வகைக் கோரையையும் குறித்தது என்றும் அறிதற்கு இடமுண்டு. ஆதலால், செருந்தி என்பதை ஒரு சிறு மரமெனக் கொண்டு விளக்குதும். செருந்தி நெய்தல் நிலத்தைச் சார்ந்தது என்பதும். நெய்தலைச் சார்ந்த மருதத்திலும் காட்சி தரும் என்பதும், ஆண்டின் ஆறு பருவங்களில் முதல் பருவமான இளவேனிற் பருவத்தில் மலரும் என்பதும், செருந்திப்பூவின் காம்பு நீளமானதென்பதும், இது வண்டுபட நன்கு விரிந்து மலரும் என்பதும், இதன் மலர் நறுமணம் உள்ளதென்பதும், தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளச் செய்யுமாறு பொன் தகடு போன்றுள்ள இது பளபளப்பாகப் பூக்கும் என்பதும், இதனை மகளிர் சூடிக் கொள்வர் என்பதும் சங்கப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

“செருந்திதாய இருங்கழிச் சேர்ப்பன்”-ஐங்: 18 : 1

“நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ”-அகநா: 150 : 9

“பருதி அம் செல்வன் போல்
 நனைஊழ்த்த செருந்தியும்”
-கலி : 26 : 2

“போதவிழ் மரத்தொடு பொரு கரைகவின்”-கலி: 26 : 7

“.... .... .... .... .... .... .... வண்டுபட
 விரிந்த செருந்தி வெண்மணல்”
-அகநா: 240 : 12-13

“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிசைச் செருந்திப்
 பல்மலர் வேய்ந்த கலம்பெறு கோதையள்”

-அகநா: 280 : 1-2
“அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்”
-புறநா: 390 : 3
“தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்”-சிறுபா : 147