பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

3


“.... .... .... .... .... .... .... பாங்கரும்
 முல்லையும் தாய பாட்டங்கால்”
—கலி. 111

(பாட்டங்கால்-தோட்டம்)

என்ற இக்கலித்தொகையடியில் வரும் ‘பாங்கர்’ என்பதற்குப் ‘பாங்கர்க் கொடி’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

“குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
 கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்”
—கலி. 103: 3-4

என்ற இக்கலிப்பாட்டில் கூறப்படும் பாங்கர் என்பதற்கு ‘ஓமை மரம்’ என்று பொருள் கோடலும் கூடும். இதன் மலரைக் குல்லை, குருந்து, கோடல் முதலிய மலைப்புற மலர்களுடன் சேர்த்துக்துக் கட்டி, கண்ணியாக அணிந்து கொள்வர் என்று கூறப்படுகின்றமை காண்க.

பாங்கர்–ஓமை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்–அகவிதழ் தனித்தவை.
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
ரானேலீஸ் (Ranales)
தாவரக் குடும்பம் : டில்லினியேசி (Dilleniaceae)
தாவரப் பேரினப் பெயர் : டில்லினியா (Dillenia)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
சங்க இலக்கியப் பெயர் : பாங்கர்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஓமை
தாவர இயல்பு : மிக அழகிய, எப்பொழுதும் தழைத்து உள்ள உயரமான பெருமரம். ஈரமான ஆற்றங்கரைகளிலும், மலைப்பகுதிகளிலும் வளர்கிறது.
இலை : ஓர் அடி நீளமான பெரிய இலை.