பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சங்க இலக்கியத்

தாவரச் சிற்றினப்பெயர் : ஹெலிகாகேபம் (helicacabum)
சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
உலக வழக்குப் பெயர் : முடக்கத்தான், முடக்கற்றான்.
தாவர இயல்பு : எங்கும் வேலியில் ஏறிப் படரும் கொடி. இணர் நுனியில் சிறு பற்றுக் கம்பி இருக்கும். இதனைக் கொண்டு இக்கொடி, கொம்பு பற்றி ஏறிப் படர்ந்து வளரும்.
இலை : கூட்டிலை. சிற்றிலைகள் பளபளப்பானவை. இவற்றின் நுனி கூர்மையானவையாக இருக்கும்.
மஞ்சரி : இலைக் கோணத்தில் கலப்பு மஞ்சரியாகத் தோன்றும்.
மலர் : மஞ்சரிக் காம்பின் அடியில் உள்ள இரு மலர்க் காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கும். சிறியது. பொன்னிற இளமஞ்சள் நிறமானது.
புல்லி : 4 புறவிதழ்கள் உட்குழிந்து இருக்கும். வெளிப்புறத்து இருவிதழ்கள் சிறியவை. உட்புறத்து இரு இதழ்களும் சற்றுப் பெரியவை.
அல்லி : 4 அகவிதழ்கள். மலரின் மேற்புறத்தில் உள்ள தாதிழைகளை ஒட்டிய இரு அகவிதழ்களின் அடியில் செதில் ஒன்று இருக்கும். பூவின் அடிப்புறத்தில் உள்ள இரு அகவிதழ்கள் உட்புறமாக மடிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் பூவின் நடுவில் இராமல் சற்று ஒதுங்கி அமைந்திருக்கும். தாதிழைகள் ஒரே உயரமில்லாதன.
சூலக வட்டம் : சூலகம் மூன்று செல் உடையது. சூல் தண்டு குட்டையானது. சூல்முடி. மூன்று பிளவானது. சூலறை ஒவ்வொன்றிலும் ஒரு சூல்.