பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

193

வேர்த் தொகுதி : பக்க வேர்கள் தடித்து வளர்கின்றன.
தண்டுத் தொகுதி : பல கிளைகளைப் பரப்பி வளரும். தண்டும் (மரம்), கிளைகளும் வலுவற்றன. எளிதில் முறிந்து விடும் இயல்புடையன. எவ்வளவு முதிர்ந்தாலும், மரத்தில் வைரம் பாய்வதில்லை. மென்மையான மரம்.
இலை : 25 முதல் 45 செ. மீ. நீளமும், 20 முதல் 30 வரை அகலமும், 2-3 முறை இறகு வடிவில் பகிர்ந்த கூட்டிலை மாற்றடுக்கு முறையில் தண்டில் உண்டாகும்.
சிற்றிலை : சிற்றிலைக் காம்புகள் 6-12 வரை எதிர் அடுக்கு முறையில் இலைக் காம்பில் 2-ஆவது 3 சிறு சிற்றிலைகளுடன் காணப்படும். சிற்றிலைகள் முட்டை அல்லது நீளமுட்டை வடிவானவை; நுனி வட்டமானவை. 10 முதல் 12 மி. மீ. நீளமும், 5 முதல் 8 மி.மீ. அகலமும் இலைச் செதில்களும், இலைச் சிறு செதில்களும் சுரப்பிகளாக மாறியிருத்தலுண்டு.
மஞ்சரி : பாணிக்கிள் (Panicle) கலப்பு மஞ்சரி இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : பெரியது; இருபாலானது; சமச் சீரற்றது; ஐந்தடுக்குள்ளது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் குவளை வடிவில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5. சமமில்லாதவை. மேலிரண்டும் சிறியவை. கீழே உள்ளது மிகப் பெரியது. பக்கத்திலுள்ளவை புல்லி வட்டத்தைத் தழுவிக் கொண்டு வட்டத் தட்டு காணப்படும்.