பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சங்க இலக்கியத்

இங்ஙனம் பல்லாற்றானும் வேறுபாடுடைய வெண்குன்றிக் கொடியைச் செங்குன்றிக் (Abrus precatorius) கொடியினின்று வேறுபடுத்திச் சிற்றினப் புதுப் பெயர் சூட்டப் பெற்றது. அதனால் வெண்குன்றிக் கொடிக்கு ஏப்ரஸ் லுகோஸ்பர்மஸ் (Abrus leucospermus, Srin. sp. nov.) எனப் பெயரிடலாம் என்று எழுதப் பட்டது. (1961).

இவ்விரு கொடிகளையும் செயற்கை முறையில் புணர்த்தி, புதுச்செடி பிறப்பித்தற்குச் செய்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போயின. அதனால் இவ்விரு கொடிகளையும் ஒருங்கே நட்டு, ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து இவை வளர்க்கப் பட்டன. உரிய காலத்தில், இவ்விரு கொடிகளும் ஒரு வாரம் முன்பின்னாக மலர்ந்தன. எப்படியோ, இவையிரண்டும் இயற்கையாகவே ஓரிணரில் இணைந்தன போலும். அதன் பயனாகச் செங்குன்றிக் கொடியில் ஒரு கொத்து மட்டும் செம்மை கலந்த ஊதா நிறமான (Pink) குன்றிமணிகளைக் கொண்டிருந்தன. அவற்றைத் தனித்து முளைக்க வைத்து வளர்த்துப் பார்த்த போது, இக்கொடியில் செம்மை கலந்த ஊதா நிறமான விதைகள் விளைந்தன என்ற உண்மையைத் தெரிவிக்க எமதுள்ளம் விழைகின்றது.

கண்ணி—குன்றி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை
தாவரவியல் துணைக் குடும்பம் : பாப்பிலியோனாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : ஏப்ரஸ் (Abrus)
தாவரச் சிற்றினப் பெயர் : பிரிகடோரியஸ் (precatorius)
தாவர இயல்பு : பசிய மெல்லிய கம்பி போன்ற நீண்ட கொடி.
இலை : பல சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் சுற்றடுக்கில் உண்டாகும்.