பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

சங்க இலக்கியத்

“. . . . . . . . . . . . . . . . . . . . பெருமலை
 வாங்கமைப் பழுகிய நறவு உண்டு
 வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே”
-நற்: 279 : 8-10

கணவனை இழந்த கண்ணகி அணு அணுவாகப் பிரியும் உயிருடன் தவித்து நிற்கிறாள். அவளுக்கு நறுஞ்சினை வேங்கை நலங்கிளர் கொழுநிழல் தந்தது என்பர் இளங்கோவடிகள்.[1]

கரிய அடி மரத்தை உடைய வேங்கை மரம் இணரூழத்து மலரும். இணரில் உள்ள அரும்புகள் நன்கு விரிந்து மலரும். மூன்று புலவர்கள், ஓரெழுத்தும் மாற்றமின்றி ஒரே தொடராகக் கூறுகின்றனர். இதன் அரும்புகள் ஒரு சேரப் பூத்தலின்,

“அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை”
1. கபிலர்: புறநா. 202 : 18
2. பெருங்குன்றூர்க்கிழார்: நற். 112 : 2
3. கொல்லன் அழிசி: குறுந். 26 : 1

இதன் இணரை, இதனுடைய அழகை, புலப்படுத்திப் புலவர் பலவாறு கூறுவர்.

“மெல்லிணர் வேங்கை”-பதிற். 14 : 11
“வேங்கை ஒள்ளிணர்”-புறநா. 265 : 2
“விரிஇணர் வேங்கை”-அகநா. 38 : 1
“பொன்னிணர் வேங்கை”-நற். 151 : 9

வேங்கையின் மலர் சற்றுச் செம்மை கலந்த மஞ்சள் நிறமானது. எனினும், புலவர்கள் இதனைச் செந்நிற மலர் என்று கூறுவர்.

“கருங்கால் வேங்கைச் செவ்வீ”-நற். 222 : 1
“கருங்கால் வேங்கைச் செம்பூ”-அகநா. 345 : 8
“செவ்வீ வேங்கைப்பூவின் அன்ன”-மலைபடு. 434

எனினும் கீரந்தையார் இதனை எரி கப்புவிட்டாற் போன்ற நிறமுடைய தென்பர்.


  1. 1. சிலப்பதிகாரம் : பதிகம் : 4