பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆத்தி-ஆர்
பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa, Lam.)

குறிஞ்சிப் பாட்டில் (67) “அடும்பமர் ஆத்திநெடுங் கொடி அவரை” என்ற அடியில் இடம் பெற்ற ‘ஆத்தி’ என்பது ஒரு சிறு மரம். இதன் மலர் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : ஆத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆர்
பிற்கால இலக்கியப் பெயர் : காட்டாத்தி, திருவாத்தி, ஆத்தி
உலக வழக்குப் பெயர் : ஆத்தி, மந்தாரை, காட்டாத்தி
தாவரப் பெயர் : பாகினியா ரசிமோசா
(Bauhinia racemosa, Lam.)

ஆத்தி-ஆர் இலக்கியம்
முடிமன்னர் குடிகளில் முன்தோன்றி மூத்த குடியில் முதற்குடி சோழர் பெருங்குடி. சோழமன்னர் தம் குடிப்பூ ‘ஆத்தி’. இதனைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணலாம்.

“அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை-குறிஞ். 67

பிற சங்கவிலக்கியங்களில் அதிலும் புறநானூற்றில் ஆத்தி மலர் ‘ஆர்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதில் மூவேந்தர்களின் குடி மலர்களும் கூறப்படுகின்றன.

“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
 மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
 கொற்ற வேந்தர் வரினும்
-புறநா. 338:6-8

(போந்தை-பனை)
 
73-17