பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

சங்க இலக்கியத்

படும். அவ்வையார் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை’ என்றார். ‘ஆர்புனை சடையோன்’ என்று கூறும் புட்பவிதி (54 : 1). ஆத்திப் பூ, கண்ணியாகவும் சூடப்படும். மாலையாகவும் புனையப்பட்டு அணியப்படும்; ஆத்தி மரத்தில் அம்பு கொண்டு, நார் உரித்துப் பயன்படுத்தினர் என்றும் அறியப்படுகிறது.

“ஆர்நார்ச் செறியத் தொடுத்த கண்ணி ”-புறநா. 81 : 3-4

“அம்பு கொண்டறுத்த ஆர்நார் உரிவையின்
 செம்பூங்கரந்தை புனைந்த கண்ணி”
-அகநா. 269 : 10-11

ஆத்தி மரக்காடு நிறைந்திருந்தமையின் ஆர்க்காடு மாவட்டங்கள் தோன்றலாயின. ஆர்க்காட்டைத் தலைநகரமாகக் கொண்டு, முற்காலத்தில் சோழர் குலக் குறுநில மன்னர் ஆண்டனர் என்ப.

“படுமணி யானைப் பசும்பூண் சோழர்
 கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்”

-நற். 227 : 5-6

ஆர்க்காட்டில் வாழ்ந்த சோழர் குல வீர மன்னன், வீர இளைஞரிடம் செல்வாக்குப் பெற்றவனாக விளங்கினான். அவன் பெயர் அழிசி. அவனது மகன் பெயர் சேந்தன். இருவருடைய காலத்திலும், ஆர்க்காடு வளம் பெற்று, எழிலோடு விளங்கியது. வனப்பு வாய்ந்த நங்கையின் எழில் நலத்திற்கு, வளமான ஊரை உவமை கூறும் மரபில் இவ்வூரும் உவமையாக்கப்பட்டது:

“ஒள்வாள் இளையர் பெருமகன்
 அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
 பழிதீர் மாண் நலம் தொலைவன கண்டே”

-குறுந். 258 : 6 - 8

ஆர் என்னும் பெயரால் பெற்ற மற்றோர் ஊர்: ஆர் + ஊர்: ஆருர். இவ்வூர் தெய்வத் தொடர்பினால் திருவாரூர் ஆயிற்று. இதனை, மனுச் சோழன் காலத்தில் சோழர் தலைநகர் என்ப.

ஆத்திமரத்தைத் தாவரவியலார் பாகீனியா ரசிமோகா (Bauhinia racemosa) என்றழைப்பர். இது சீசல்பினாய்டியே (Ceasalpinoideae) என்னும் துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இத்துணைக் குடும்பத்தில் பல பிரிவுகள் உள்ளன (tribe). அவற்றுள் ஒன்று பாகினியே (Bauhineae) என்பது. இதில் 37 பேரினங்கள் உள்ளதாக ‘ஹூக்கர்’ அறிவித்துள்ளார். ‘காம்பிள்’ என்பவர் 10 பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகக் குறிப்பிடுவர். இவற்