பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

சங்க இலக்கியத்

றுள், ‘ஆத்தி’ என்னும் பெயரில் குறிப்பிடத்தக்க மூன்று சிறு மரங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன. இவை மூன்றும் ஒரே மாதிரியானவை. கபிலர் கூறும் ஆத்தி அல்லது கோவூர் கிழார் கூறும் ‘ஆர்’ என்பதைத் தாவரவியலில் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea) என்று கருத இடமுண்டு. ‘மந்தாரத்தில் தாரம் பயின்று’ என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இதனை ‘மந்தாரை’ என்றும் கூறுவர்.

இதனைக் கொக்கு மந்தாரை என்றும், வெள்ளை மந்தாரை என்றும், கலைக் களஞ்சியம் (Vol. II : P 1124) குறிப்பிடுகிறது. இதனைப் பாகீனியா பர்பூரியா (Bauhinia purpurea) என்றழைப்பர். ஞானசம்பந்தப் பெருமான் ‘கொக்கின் இறகினொடு வன்னி புக்கசடையார்’ என்று கூறும் கொக்கு மந்தாரை என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இது ‘மந்தாரம்’ எனவும், ‘திருவாத்தி’ எனவும், ‘திருவாட்சி’ எனவும் வழங்கப்படும்.

இதைப் போலவே, அகவிதழ்களின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகவும் மேற்பாகத்தில் சிறிய செம்மை நிறப் பகுதியும் கொண்ட இன்னுமொரு ஆத்தி காணப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் பாகீனியா டொமேன்டோசா (Bauhinia tomentosa) என்று பெயர் இதனை ஒரு சிலர் ‘காட்டாத்தி’ என்பர். இது ஆங்கிலத்தில், ஹோலி மௌன்டன்-எபனி (Holy mountain-ebony) எனப்படும். இன்னொரு ஆத்தி மரம் திருக்கோயில்களில் வளர்க்கப்படுகின்றது. இதன் பூக்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இதனைப் பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa) என்றழைப்பர். இதற்குப் ‘பர்பிள் பாகீனியா’ என்ற பெயரும் உண்டு.

ஆத்தி—ஆர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்பெல்லேட்டா
தாவரக் குடும்பம் : சீசல்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : பாகீனியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : ரெசிமோசா (гaсеmosа)
தாவர இயல்பு : சிறு மரம். கோணல் மாணலாக வளரும்
தாவர வளரியல்பு : மீசோபைட்