பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

இலை : இரண்டு சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. இரண்டும் அடியில் ஒட்டியிருக்கும்.
இலைக்காம்பு : 15 மி.மீ. முதல் 22 மி.மீ.நீளமானது.
சிற்றிலை : 6 செ. மீ. முதல் 8 செ. மீ. நீளம். 4.5 முதல் 6 செ.மீ. அகலம்.
இலை நரம்பு : கையன்ன விரி நரம்புகள் இலை நுனி வரையில்.
இலையடிச் செதில் : 2 சிறியவை, முதிரு முன்னர் உதிர்ந்து விடும்.
மஞ்சரி : நுனி வளர்ந்த பூந்துணர் உச்சியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. இருபக்கச் சமச் சீரானது. பூவடிச் செதில்களும் பூவடிச் சிறு செதில்களும் உண்டு.
புல்லி வட்டம் : ஐந்து பசிய மடல்கள் பற்கள் போன்றிருக்கும்.
அல்லி வட்டம் : 5 மடல்கள், சற்றுச் சமமில்லாமலிருக்கும். நேராகக் காணப்படும். திருகு இதழமைப்பு.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள், மகரந்தப் பைகள் சுழல் அமைப்புடையன. நீளவாக்கில் வெடிக்கும்.
சூலக வட்டம் : சூற்பை காம்புடனிருக்கும். பல சூல்களை உடையது. சூல்தண்டு குட்டையானது. இழை போன்றது.
கனி : தட்டையானது: உட்புறம் தடுப்புகள் உடையது.
விதை : முட்டை வடிவானது; முளை சூழ்தசை கொண்டது.

இம்மரம். இந்தியாவில் பஞ்சாப் முதல் இலங்கை வரையில் வளர்கிறது.சீனா, மலேயா நாடுகளிலும் காணப்படுகிறது.