பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

சங்க இலக்கியத்

ஆவிரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் பிரிந்தவை-காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : சிசால்பினியே (Caesalpineae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆரிகுலேட்டா (auriculate)
தாவர இயல்பு : ஓரிராண்டுகள் வாழும் புதர்ச் செடி.
தாவர வளரியல்பு : மீசோபைட். மற்றும் அளர் நிலத்திலும் வளரும்.
இலை : அடியிலும், முடியிலும் குறுகிய 8-12 சிற்றிலைகளைக் கொண்ட பசிய கூட்டிலை.
இலையடிச் செதில் : சிறப்பானது. இலையடிக் காம்பின் இரு புறத்திலும் அகன்ற இதய வடிவான (காது வடிவான) பசிய இலையடிச் செதில்கள் காணப்படும்.
மஞ்சரி : கிளை நுனியில் ஆனால் இலைக் கோணத்தில் நுனி வளராப் பூந்துணர் கொத்தாகத் தோன்றும். ‘காரிம் போஸ்’ எனப்படும்.
மலர் : பளிச்சென்ற மஞ்சள் நிறமானது. பெரியது. 2-3 செ.மீ. நீள, அகலமுடையது. ‘விரிமலர் ஆவிரை’ என்பது பொருந்தும் அளவுக்கு அகவிதழ்கள் விரிந்து மலரும்.
புல்லி வட்டம் : 5 சிறிய பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து மேலே பிரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : சிறந்த மஞ்சள் நிறமான அகன்ற 5 அகவிதழ்கள் அடி தழுவிய அமைப்பில் ஏறக் குறைய ஒரு மாதிரியாகவே இருக்கும். இதழ்கள் நன்கு பிரிந்து, பளபளப்பாகவே தோன்றும்.