பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



293

“மாரிஈங்கை மாத்தளிர் அன்ன”-அகநா. 75:1:7

“ஈங்கை” என்பதற்கு, ‘இண்டு, இண்டை’ என்று உரை கூறுவர்.

“ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை”-குறிஞ். 86

என்ற அடியில் உள்ள ஈங்கை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இண்டம்பூ’ என்று உரை கண்டுள்ளார்.

ஈங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளேரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : மைமோசாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : மைமோசா (Mimosa)
தாவரச் சிற்றினப் பெயர் : ரூபிகாலிஸ் (rubicaulis)
சங்க இலக்கியப் பெயர் : ஈங்கை
உலக வழக்குப் பெயர் : இண்டு, இண்டை, இண்டங்கொடி
தாவர இயல்பு : புதர்க் கொடி. நீண்டு வளரும், இக்கொடியில் வளைந்த முட்கள் செறிந்திருக்கும்.
இலை : கூட்டிலை, 10-15 இறகன்ன பிரிவுடையது. சிற்றிலைகள் சிறியவை 0. 5.-0.7 அங்குலம் நீளமானவை. இலைக் காம்பில் முட்கள் இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் தனிக் கொத்தாக உண்டாகும். எனினும் நுனியில் நுனி வளர் பூந்துணரா கிடும்.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. 4 புறவிதழ்கள் இணைந்தவை.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் மேலே தனித்தனி பிரிந்து காணப்படும் .அடியில் இணைந்திருக்கும்.