பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“தாமே ஆண்ட ஏமங் காவலர்
 இடுதிரை மணலினும் பலரே”
-புறநா. 363 : 1-4

இதன் இலை கூட்டிலை ஆகும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இது ஒரு வகை வேலமரமாகும் என்று பிங்கல நிகண்டு கூறும்; இம் மரம் சிறு குடைபோலப் பரவிக் கிளைத்துத் தழைத்திருக்கும். ஆதலின், இதனைக் குடை வேல மரமென்றனர் போலும்.

உடை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினோசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அக்கேசியா (Acacia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளானிபிரான்ஸ் (Plaifrons)
சங்க இலக்கியப் பெயர் : உடை
உலக வழக்குப் பெயர் : ‘ஓடை’ என்பார் காம்பிள்
பிற்கால இலக்கியப் பெயர் : குடைவேலம்
ஆங்கிலப் பெயர் : பாபுல் (Babul)(Umbrella-thornbabul)
தாவர இயல்பு : சிறு மரம்; குடை போலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த முடியுடையது;
இலை : கூட்டிலை, 1 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடையது; சிற்றிலைகள் 3-4 இணைகள் சிறகு வடிவில்–சிற்றிலைகள் (.06×.01) அங்குலம்–மிகச் சிறியவை. இலைச் செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும்.