இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடு
டெர்மினாலியா சிபுலா (Terminalia chebula , Retz.)
கடு இலக்கியம்
“கடுகலித்து எழுந்த கண் அகழ் சிலம்பில்”-மலைபடு : 14
என்ற இந்த மலைபடுகடாத்தின் அடிக்கு, “கடுமரம் மிக்குவளர்ந்த இடமகன்ற பக்க மலையில்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இது கடுக்காய் விளையும் மரமாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு.
சங்க இலக்கியப் பெயர் | : | கடு |
உலக வழக்குப் பெயர் | : | கடுக்காய் மரம் |
கடு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorae) மிர்ட்டேலீஸ் (Myrtales) |
தாவரக் குடும்பம் | : | மிர்ட்டேசி (Myrtaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | டெர்மினாலியா (Terminalia) |
தாவரச்சிற்றினப்பெயர் | : | சிபுலா (chebula) |
சங்க இலக்கியப் பெயர் | : | கடு |
உலக வழக்குப் பெயர் | : | கடுக்காய் மரம் |
தாவர இயல்பு | : | 3000 அடி உயரம் வரையில் உள்ள மலையிலும் காடுகளிலும் வறண்ட நிலத்திலும் வளரும் மரம். |
73-21