பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

சங்க இலக்கியத்

மராஅம்—செங்கடம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெசித்திடேசி (Lecythidaceae)
தாவரப் பேரினப் பெயர் : பாரிங்டோனியா (Barringtonia)
தாவரச் சிற்றினப் பெயர் : அக்யுடாங்குலா (acutangula)
தாவர இயல்பு : மரம் பசியது. கிளைத்தது. நீர் நிலை ஓரமாகவும், நீரிலும் வளர்ந்திருக்கும். வேடந்தாங்கல் ஏரியின் கரையிலும், ஏரியிலும் வளர்கிறது. சாதாரண உயரம் உள்ளது.
இலை : மெல்லிய அகன்ற தனியிலை. சுற்றடுக்கில் இருக்கும். பல நரம்புகளை உடையது.
மஞ்சரி : நீண்ட நுனி வளரும் பூந்துணர் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். தேர்ச் சக்கரம் போன்ற செவ்விய வட்ட வடிவான மலர்களை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று மலர் விடும்.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது. வட்ட வடிவானது. நடுவில் துளை உள்ளது. மலர்ந்த பின், இணர்க் காம்பிலிருந்து கழன்று கீழே விழும். மலர்த்துளையின் விளிம்பு வெண்ணிறமானது. வெளிப்புறம் செந்நிறமான, நூற்றுக்கணக்கான தாதிழைகளால் ஆனது. தாதிழைகள் நுனியில் வட்டமான வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்திற்கு வெளிப்புறத்தில் தாதுப் பைகள் காணப்படும். அவற்றில் செந்நிறத் தாது உகும்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ் விளிம்புகள் நேர் ஒட்டு முறையில் இணைந்துள்ளன. நடுவில் துளை இருக்கும்.