பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

331

அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் தாதிழைக் குழலுடன் இணைந்துள்ளன.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள் மெல்லியவை. நீண்டவை. அடுக்கடுக்கானவை. அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். இவை தேர் உருளையின் ஆரக்கால்கள் போன்றவை. தாதிழைகளில் தாதுப்பைகள் உள்ளன. மகரந்தம் செந்நிறமானது.
சூலக வட்டம் : 2-4 செல்களை உடையது. ஒவ்வொன் றிலும் 2-8 தொங்கு சூல்களை உடையது. சூல்தண்டு நீளமானது. மெல்லியது. சூல்முடி சிறியது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி. நீள் உருண்டை வடிவானது. நான்கு பட்டையானது. கனியின் துனியில் புல்லிவட்டம் ஒட்டிக் கொண்டிருககும்.
விதை : ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை உண்டாகும். விதை அடியிலும், நுனியிலும், சிறுத்தும், நடுவில் பருத்தும் இருக்கும். கரு பெரியது. வித்திலைகள் அருகிப் போயிருக்கும்.

இம்மரம் வலியது. ஆயினும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. பட்டை கரும்பழுப்பு நிறமானது. மரம் வெண்மையானது. மென்மையானது. அழகிய வெள்ளிய ஆரங்களை (கோடுகளை) உடையது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என்று சப்தி சிங் (1961) என்பாரும், ராய் ஆர். பி. ஜா (1965 பி) என்பாரும் கூறுவர்.