பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

தாவர இயல்பு : செடி; நுண்மயிர் இலைகளிலும், தண்டிலும் அடர்ந்திருக்கும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்; குளிர்ந்த நிலப்பாங்கில் பயரிடப்படுகிறது. செடி 1-3 அடி உயரமானது; தழைத்து நேராக வளரும்.
இலை : 2-3 முறை சிறகன்ன பிளவுபட்டது. சிற்றிலை நீளமானது. இலையடிச் செதிலிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் ‘அம்பெல்’ எனப்படும். ஆயினும் 6-16 கிளைகள் ஒரே மட்டமாகத் தட்டு போலப் பரவியிருக்கும்.
கனி : ஏறத்தாழ முட்டை வடிவானது. புற விளிம்புகளும் ‘விட்டே’யும் காணப்படும்.

இந்திய நாட்டில் பஞ்சாப் முதல் வங்காளம் வரையிலும், தெற்கே டெக்கான் வரையிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது.

மேற்கு ஆசியா, தெற்கு யூரோப், வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

சிறந்த மருந்துச் செடி. இதன் கனியே ஓமம் எனப்படும்.