பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

355

திருத்தக்க தேவர், நீரில் தோய்த்த வெண்துகில் போன்றது இதன்பூ என்பர்.

“மாசில் வெண்துகிலை நீர் தோய்த்து மேற்போர்த்த வண்ணமே போல்
 காசின் மாட்டொழுகப் பூத்த அழிஞ்சில் கண்ணார் கவின் கொண்டன ”
[1]

இம்மரம் தாவரவியற் சிறப்புடையது.

“சே”–அழிஞ்சில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorace)
தாவரக் குடும்பம் : அலாஞ்சியேசி
தாவரப் பேரினப் பெயர் : அலாஞ்சியம் (Alangium)
தாவரச் சிற்றினப் பெயர் : சால்விபோலியம் (salvifolium)
சங்க இலக்கியப் பெயர் : அழிஞ்சில்–தொல்காப்பியத்துள் காணப்படுகிறது.
உலக வழக்குப் பெயர் : அழிஞ்சி மரம், அலஞ்சி
தாவர இயல்பு : மரம், இலையுதிர் சிறுமரமென்ப.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அரை அங்குல நீளமான தனி இலை. 3-5 நரம்புகள் உள்ளன.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கொத்தாகத் தோன்றும்.
மலர் : மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. அழகானது. மணமுள்ளது. மலர்க் காம்புடன் சூலகம் இணைந்திருக்கும்.

  1. சீ. சிந். 1649 :2-3