பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

361


“கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராஅத்து
 நெடுமிசைச் சூழும் மயில்ஆலும் சீர”
-கலி. 36 : 1-2

பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மராமலர்த் தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம்பெருவழுதியார்:

“அராஅணர் கயந்தலை தம்முன் மார்பின்
 மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
 அலங்கும் அருவிஆர்த்து இமிழ்பு இழிய”

பரி. 15 : 19-20


வெண்கடம்பின் வெள்ளிய மலர்கள் பூங்கொத்தில் வலமாக முறுக்கிய புரி அமைப்புடையன. இவ்வுண்மையைப் புலவர்கள் பாடியுள்ளனர்.

“சிலம்பு அணிகொண்ட வலஞ்சுரி மராஅத்து”
-குறுந். 22 : 3

“வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீ”-அகநா. 83 : 1

உடன் போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், வழியில் பூத்துள்ள மராமரக் கிளையை வளைத்துக் கொடுக்க, அவள் அதன் மலர்களைக் கொய்து, தானும் சூடிக் கொண்டு, தனது பொம்மைக்கும் சூட்டினாள். இதனைக் கண்ட தலைவன் மகிழ்ந்தான் என்று கூறும் ஐங்குறுநூறு:

“கோட்சுரும்பு அரற்றும் நாட்சுரத்து அமன்ற
 நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
 வலம்சுரி வால்இணர் கொய்தற்கு நின்ற
 மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந் தன்றே
 பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
 அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே”
-ஐங். 383

வெண்கடம்பின் பூவைத் தனியாகச் சூடுவதோடு, பிற பூக்களோடும் மாந்தளிரொடும் மரல் நாரில் தொடுத்துக் கண்ணியாகச் சூடினர் என்று கூறும் மலைபடுகடாம்.

“தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
 உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
 தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
 திரங்கு மரல்நாரில் பொலியச் சூடி”

(தேம்பட-தேன் உண்டாக). -மலைபடு. 428-431