பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

சங்க இலக்கியத்

மராஅம்–வெண்கடம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae) அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆன்தோசெபாலஸ் (Anthocephalus)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகஸ் (indicus,Rich.)
இதன் முன்னைய தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் கடம்பா
தாவர இயல்பு : பருத்துக் கிளைத்து உயரமாக வளரும் பெரிய மரம். வறண்ட நிலத்திலும், 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும் உயர்ந்து வளரும். எடுப்பான தோற்றம் உள்ளது
இலை : முட்டை வடிவான 6 அங்குலம் அகன்ற தனி இலை, ஓர் அடி நீளமானது. இலைச் செதில்கள் ஈட்டி போன்றன. எளிதில் உதிர்வன.
மஞ்சரி : கொத்தாகப் பூக்கும். இணர்க்காம்பு உள்ளது. கிளை நுனியில் வெள்ளிய பூங்கொத்து திரண்டு தோன்றும். இவ்விணர் ‘ஹெட்’ எனப்படும்.
மலர் : மங்கிய வெள்ளை நிறமானது. ஐந்தடுக்கானது. நறுமணம் உள்ளது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து குழல் போன்றிருக்கும். மேலே 5 பிரிவுகளை உடையது.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து அடியில் நீண்ட குழலுடன் புனல் வடிவானது. மேலே 5 மடல்கள் தழுவிய ஒட்டு முறையில் காணப்படும். பளபளப்பானவை.