பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தணக்கம்–நுணா
மொரிண்டா கோரியா (Morinda coreia, Ham.)

‘தணக்கம்’ என்ற சொல் குறிஞ்சிப் பாட்டில் (85) மட்டும் ‘பாங்கர் மராஅம், பல்பூந்தணக்கம்,’ எனக் காணப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர், ‘தணக்கம் பூ’ என்று உரை கண்டாராயினும், நிகண்டுகள் இதனை ‘நுணா’ என்று கூறுகின்றன. நுணா என்பது ஒரு மரம். மலையிடத்துக் காடுகளில் வளர்கின்றது. பல பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : தணக்கம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நுணா, நுணவு, நுணவம்
பிற்கால இலக்கியப் பெயர் : நுணா
உலக வழக்குப் பெயர் : நுணா, மஞ்சள்நாறி, மஞ்சலாட்டி
தாவரப் பெயர் : மொரிண்டா கோரியா
(Morinda coreia, Ham.)

தணக்கம்–நுணா இலக்கியம்

‘தணக்கம்’ என்னுஞ்சொல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் வந்துள்ளது.

“பாங்கர் மராஅம் பல்பூங் தணக்கம்-குறிஞ். 85

நச்சினார்க்கினியர் பல்பூந் தணக்கம் என்பதற்குப் ‘பல பூக்களை உடைய தணக்கம்பூ’ என்று உரை எழுதினார். பிற்கால இலக்கியத்தில் - பெருங்கதையில்[1] ‘தண்பூத்தணக்கம்’ என்று கூறப்படுகிறது.

 

  1. பெருங்கதை இலா 15 : 15