இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
370
இலை | : | அகன்று நீண்ட தனி இலை. 3 செ.மீ. அகலமும், 10-12 செ.மீ. நீளமுமான பசிய இலை. சுற்றடுக்கில் 3 அல்லது 4 இலைகள் காணப்படும். இலைச் செதில்கள் உண்டு. |
மஞ்சரி | : | கிளை நுனியில் அல்லது இலைக்கோணத்தில் அம்பல் என்னும் நுனி வளராப் பூந்துணராகக் காணப்படும். |
மலர் | : | வெண்மை நிறமானது. பூவடிச் செதில் இல்லை. |
புல்லி வட்டம் | : | புல்லிக் குழல் பம்பர வடிவமாகவோ, அரைக்கோளமாகவோ காணப்படும். கால்கள் குறுகியவை. |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் இணைந்தது. அல்லிக் குழல் ஏறக்குறைய புனல் வடிவமானது. நீளமாகக் காணப்படும். மடல்கள் 4 மொட்டில் தொடு இதழமைப்பானது. |
மகரந்த வட்டம் | : | 4 தாதுக்கால்கள்; இவை அல்லியிதழ்களின் தொண்டையில் பொருத்தப்பட்டிருக்கும். மகரந்தக் கால்கள் குட்டையானவை. தாதுப்பைகள் நீள் சதுரமாகக் காணப்படும். |
சூலக வட்டம் | : | சூற்பை 2-4 அறைகளை உடையது. தடுப்புச் சுவர் அடித்தளத்தில் இருக்கும். சூல்தண்டு மென்மையானது. சூல்முடி இருபிளவாக இருக்கும். |
கனி | : | இணைந்த சூலிலைகளால் ஆன ‘அக்ரி கேட்’ சதைக் கனி; 4 பைரீன்கள் கொண்டது. |
விதை | : | நீள் சதுரமானது. புறவுரை சவ்வு போன்றது. முளை சூழ்தசை சதைப் பற்றாக இருக்கும். வித்திலைகள் சிறியவை. முளை வேர் நீளமாகவும், கீழ் மட்டமானதாயும் இருக்கும். |
நுணா மரம் மஞ்சள் நிறமான தண்டுள்ளது; வலியது; நுகத்தடிக்கும் மர வேலைக்கும் பயன்படும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் பரவலாக வளர்கிறது.