பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

தாவர வளரியல்பு : மீசோபைட் (mesophyte) இரண்டாயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் உதகையின் பெருமலைப் பாங்கில் குளிர்ந்தவிடத்தில் மட்டும் வளரும்.
இலை : தனியிலை. தோல் போன்றது. தடிப்பானது. மாற்றடுக்கில் பெரிதும் கிளை நுனியில் காணப்படும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. இலைக்கோணத்தில் கொத்தாக வளரும்.
மலர் : பெரிய, விரிந்த மலர்கள். குருதிச் செந்நிறமானவை மடல் மேலே விரிந்தவை. சிவந்த பூவடிச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 சிறு, பசிய புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5-10 இதழ்கள், புனல் வடிவம்.
மகரந்த வட்டம் : 5-10 வரை மகரந்தத் தாள்கள் உள்ளன. மகரந்தத் தாள்கள் இழை போன்றவை; தாதுப்பை சற்று நீளமானது. நுனியில் உள்ள துளை வழியாகத் தாது உகும்.
சூலக வட்டம் : 5-20 சூலறைகளும், ஒவ்வொன்றிலும் எண்ணற்ற சூல்களும் உள்ளன. சூல் தண்டு மென்மையானது. சூல்முடி குல்லாய் வடிவானது.
கனி : 5-20 அறைகளுடைய வலிய காப்சூல். சுவர் வழி வெடிக்கும் கனி
விதை : பல முளை சூழ் தசையுள்ள விதைகள். விதையின் வெளியுறை வால் போல் நீண்டிருக்கும். இச்சிறு மரங்கள் ஒரு சேரப் பூத்த நிலையில் நெருப்பு அகைந்தன்ன அழகுடன் காட்சி தரும்.