பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

புல்லி வட்டம் : 4-9 புறவிதழ்கள், மெல்லிய, சிறிய, பசுமையான அடியில் இணைந்த இதழ்கள்.
அல்லி வட்டம் : 4-10 திருகு இதழமைப்பு அகவிதழ்கள் புனல் வடிவில் இணைந்திருக்கும். வெண்மையானவை.
மகரந்த வட்டம் : மகரந்தத்தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். அல்லியின் மேல் நிலையில் ஒட்டியவை. இரு மகரந்தப் பைகளிலும் தாது விளைகிறது.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல் தலைகீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : சதைக்கனி
விதை : ஒவ்வொரு சூலிலையிலும் ஒரு விதை நேராகக் காணப்படும். வித்திலைகள் குவிந்தும், விதை தட்டையாகவும் காணப்படும். விதையில் முளை சூழ் தசை இல்லை. விதையுறை மெல்லியது.
கரு : நேரானது
முளைவேர் : கீழ்மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், நறுமணம்.
பயன் : தமிழ் மக்களின் அகத்துறை, புறத்துறை ஆகிய வாழ்வியலில் பெரிதும் இயைந்த மலர். நல்ல நறுமணம் உடைமையின், மக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதில் மணமுள்ள எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதற்கு ‘ஜாஸ்மின் ஆயில்’ என்று பெயர். இதனைப் பலவகையிலும் பயன்படுத்துகின்றனர்.