பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

நீளமாகவும், நுனியில் மடல் விரிந்து 10–12 இதழ்கள். அடியும், நுனியும், குறுகி, நடுவில் அகன்று மிக மெல்லியதாக இருக்கும்.
மகரந்த வட்டம் : மகரந்தத் தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கி இருக்கும். அல்லி ஒட்டியவை. ஒவ்வொன்றிலும் இரு மகரந்தப் பைகள்.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள் தலை கீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிரிவுள்ளது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : இதன் பேரினத்தின் சதைக்கனி அருகி உண்டாகும் என்பர். ஆனால், இதில் கனி காணப்படவில்லை.
விதை : சூலிலை ஒவ்வொன்றிலும் ஒன்று. தட்டையானது. விதையுறை மெல்லியது. வித்திலை குவிந்தது. முளை சூழ்தசை இல்லை.
கரு : நேரானது.
முளை வேர் : கீழ் மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால்.
பயன் : இதன் மலர் நறுமணம் மிக்கதாகலின், கண்ணி, மாலையாகத் தொடுத்துச் சூடிக் கொள்வர். விழாக்களில் அலங்காரப் பொருளாகப் பயன்படும். மலர்களில் இருந்து ‘ஜாஸ்மின் ஆயில்’ எனப்படும் நறுமண எண்ணெய் எடுக்கப்பட்டுப் பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது. மலருக்காக இக்கொடி, பெரும் அளவில் மலர்த் தோட்டங்களில் பயிரிடப் படுவதோடு, வீட்டுத் தோட்டங்களிலும், திருக்கோயில் மலர் வனங்களிலும் வளர்க்கப்படுகிறது.