பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தளவம்-செம்முல்லை
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘தளவம்’ என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர் மேலும் அவர் இதனை முல்லை விசேடம் என்று கூறி, இது முல்லை வகையினதென்னும் தாவரவியலுண்மையையும் புலப்படுத்தியுள்ளார். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்று பெயர். தொல்காப்பியத்தில் இது ‘தளா’ என்று குறிப்பிடப்படுகிறது. இது பல்லாண்டுகள் வாழும் புதர்க் கொடியாகும்.

மேலும், கபிலர் கூறும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆதலின், தளவம் என்பதும் பித்திகம் என்பதும் ஒன்றுதானா அல்லது வேறு பட்டவையா? என்பது பற்றிய இதன் விரிவைப் ‘பித்திகம்’ என்ற தலைப்பில் காணலாம்.

சங்க இலக்கியப் பெயர் : தளவம்
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : தளா, தளவு, பித்திகம்
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

தளவம்-செம்முல்லை இலக்கியம்

‘தாழை தளவம் முட்டாள் தாமரை’ என வரும் குறிஞ்சிப் பாட்டில் (குறிஞ். 80) உள்ள தளவம் என்பதற்கு நச்சினார்க்