பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

439

இருக்குமோ என்பது சிந்தனைக்குரியது. முல்லையினத்தில் பெரிதும் ஏறுகொடிகளே உள்ளன. ஆதலின், கொடிமுல்லை என்பது மட்டும் கொண்டு, இதனுடைய தாவரவியல் பெயரைக் கண்டு கொள்ள இயலவில்லை. எனினும், தஞ்சாவூர்ப் புறநகரிலும், மன்னார்குடியிலும், குடந்தைக்கருகில் உள்ள முல்லை வனத்திலும் வழக்கில் உள்ள கொடி முல்லைக் கொடியைக் கொண்டு வந்து, ஆய்வு செய்து, இதன் தாவரப் பெயர் அறுதியிடப்பட்டது.

கொகுடி (கொகுட்டம்) கொடிமுல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : சாம்பக் வகை ஹேனியானம் (sarnbac Ait. var. heyneanum C. B. Clarke)
சங்க இலக்கியப் பெயர் : கொகுடி
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர் : முல்லை
பிற்கால இலக்கியப் பெயர் : கொகுடி, முல்லை
உலக வழக்குப் பெயர் : கொடி முல்லை, முல்லைக் கொடி, நித்திய கல்யாணி.
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின்
இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி, ஏறுகொடி.
வளரியல்பு : மீசோபைட்