பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

சங்க இலக்கியத்

உயரம் : 20 முதல் 50 மீட்டர் நீளம். படர்ந்து வளரும் ஏறுகொடி.
வேர்த் தொகுதி : ஆணி வேர், பக்க வேர்கள்
தண்டுத் தொகுதி : 2-3.5 மி. மீ. பருமன்.
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து நீண்டு, கிளைத்து வளரும். நுனியில் பூங்கொத்தாகி விடும்.
இலை : கூட்டிலை எதிரடுக்கில் 18 முதல் 20 செ.மீ நீளம், அடியில் 2, நுனியில் 1 சிற்றிலை. இலைக் காம்பு 12-15 செ.மீ. நீளமானது.
சிற்றிலை : அடியில் உள்ள இரண்டும் 5-6.5 செ.மீ.நீளம், 2.5-3 செ.மீ. அகலம். நீள் முட்டை வடிவம். நுனியில் உள்ள சிற்றிலை காம்புடன் 7-8.5 செ.மீ. நீளம், சிற்றிலைக் காம்பு 12-15 மி.மீ. நீளம்.
நீள, அகலம்
: 5.5-7 X 3-3.5 செ. மீ.
விளிம்பு
: பளபளப்பானது. நேர் விளிம்பு.
நுனி
: நேர் கோணமானது.
மஞ்சரி : மஞ்சரிக் காம்பு 6-8 செ.மீ. நீளம். இலைக் கோணத்திலும், கிளை நுனியிலும், நுனி வளராப் பூந்துணர் அடியில் துணர்ச் செதில் சிற்றிலை போன்றது; சிறியது; மெல்லியது. 3-4 X 1-1.5 மி.மீ.
அரும்பும் போது : 10-15 மலர்கள் உண்டாகும். 3-3.5 செ.மீ. நீளம்.
மலர்க் காம்பு : 2 மி.மீ. குட்டையானது.
புல்லி வட்டம் : 5 பச்சை நிறமுள்ள புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவானது. 3-5 மி.மீ. நீளம். மேலே 5 விளிம்புகள் காணப்படும்.