தாவரங்கள்
35
“தொடர்ந்த குவளை தூநெறி அடைச்சி”-பதிற். 27-2
செங்குவளையாகிய செங்கழுநீர் மலரைச் சிவபெருமானுக்குரிய மலராகப் போற்றுவர் மணிவாசகர்.[1]
இம்மலர், இறைவன் சென்னிமிசையிருப்பதைப் பார்த்து இறைக் காதல் கொண்ட ஒருத்தி, அவன் தானேயாகும் தன்மையுன்னி,
“இன்னியல் செங்கழு நீர்மலர் என்தலை
எய்துவ தாகாதே”[2] என்கிறாள்.
குவளைச் செடிக்கு அடியில் வேருடன் கூடிய கிழங்கும் உண்டு. இதனை அடிமட்டத்தண்டு என்பர் தாவரவியலார். புலவரும் கிழங்கின் துணை கொண்டு இச்செடி நீர் வற்றிப் போனாலும் அழிவதில்லை என்பர்.
“நீர்கால் யாத்த நிறை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்”-குறுந். 388
- இதனால் இதனைத் ‘தொடர்ந்த குவளை’ என்பர்.
குவளையின் இலைகளும், மலர்களும் பசிய நீண்ட காம்புடையன. குவளைப் பசுந்தண்டு (காம்பு) கொண்டு மகளிர் கைகளில் காப்புகளாக அணிவர்.
“பவள வளைசெறித்தாட் கண்டுஅணிந்தாள் பச்சைக்
குவளைப் பசுங்தண்டு கொண்டு;
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய்”-பரி. 11: 101-105
மேலும் பெண்கள் குவளை மலருடன், நெய்தல்பூ, கல்லகாரப்பூ (நீர்க்குளிரி) மல்லிகைப்பூ முதலியவற்றை விரவிக் கண்ணியாகப் புனைவர் என்கிறார் நல்லந்துவனார்.
செங்குவளை, ஆம்பல், தாமரை முதலிய கொடிகள் சுனையில் வளர்வன. இவற்றின் இலைகள நீர் மட்டத்தின் மேலே காணப்