பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

521

இலை : இக்கொடியின் இலை தடித்த, அகன்ற தனியிலையாகும். 2 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் உள்ள இலை அடி வரை நீண்ட இரு பிளவானது. இதனால், இதற்குப் ‘பைலோபா’ என்று பெயரிட்டனர்.
மலர் : இலைக்கட்கத்தில் உண்டாகும்‌ பெரிய தனி மலர் மணி வடிவானது. செந்நீல நிறமானது.
புல்லி வட்டம் : 5 பசிய புல்லியிதழ்கள். 3- 5 அங். நீளமானவை. இவற்றுள் புறத்திதழ்கள் இரண்டும் சற்றுச் சிறியவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்தும், மேலே மடல்கள் விரிந்தும், அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 5 மெல்லிய நீண்ட தாதிழைகள் ஒரு படித்தன்று.
சூலக வட்டம் : 2 செல் உடையது. 4 சூல்கள். சூல்முடி, குல்லாய்‌ வடிவானது.
கனி : 4 ‘வால்வு’களை உடைய உலர்கனி. ‘காப்சூல்’ எனப்படும்.
விதை : பழுப்புத் தங்க நிறமானது. நுண்மயிர் அடர்ந்தது. வித்திலைகள் இரு பிளவானவை.

இக்கொடி, மணல் அரிப்பைத் தடுக்கும் நல்லதொரு தாவரமாகும். இதன் அடியில் வலிய நீண்ட கிழங்கிருக்கும்.