இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
554
சங்க இலக்கியத்
“மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத்து அன்ன நிறைசுனைப் புறவின்
கௌவை போகிய கருங்காய் பிடிஏழ்
நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எண்”-மலைப. 103-106
எள்ளின் பூ வெண்ணிறமானது. இப்பூ கவிழ்ந்து பூக்கும். பூ அடியில் குழாய் வடிவானது. மேற்புறத்தில் அகவிதழ்களில் மூன்று மடல் விரிந்து நீண்டும், அடியில் இரு அகவிதழ்கள் சற்றுக் குட்டையாக இருபுறத்தும் இருக்கும். பூவின் அமைப்பு குமிழம் பூவை ஒத்திருக்கும். இதனால் இது மூக்குக்கு உவமிக்கப்படும்.
“எட்பூ ஏசிய நாசியாய்”என்றார் கம்பர்[1]
இப்பூ கண் நோய்க்கு நல்ல மருந்தென்பர்.
எண்—எள் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே பர்சொனேலீஸ் (Bicarpellatae Personales) |
தாவரக் குடும்பம் | : | பெடாலியேசி (Pedaliaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | செசேமம் (Sesamum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகம் (indicum) |
சங்க இலக்கியப் பெயர் | : | எண் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | எள். |
உலக வழக்குப் பெயர் | : | எள். |
ஆங்கிலப் பெயர் | : | ஜிஞ்ஜிலி (Gingelly seed) |
தாவர இயல்பு | : | சிறு செடி. கிளைத்து 2 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். |
இலை | : | தனி இலை. அகன்று நீண்டது. அடியிலை பிளவுடையது. |
- ↑ கம்பராமாயணம்.