இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
590
பிற்கால இலக்கியப் பெயர் | : | கஞ்சங்குல்லை |
உலக வழக்குப் பெயர் | : | நாய்த் துளசி, புனத் துளசி |
ஆங்கிலப் பெயர் | : | வொயில்டு பேசில் (wild basii) |
தாவர இயல்பு | : | வெற்றிடங்களில் 2-4 அடி உயரம் வரையில் தழைத்துக் கிளைத்து வளரும் செடி. இது துளசிச் செடியைப் பெரிதும் ஒத்தது. |
இலை | : | துளசி இலையைக் காட்டிலும் சற்று அகன்று, நீண்டிருக்கும். (1.5" X .5") இலைக் காம்பு நீண்டது. இலையில் நுண்மயிர் இருக்கும். |
மஞ்சரி | : | நறுமணமுள்ளது. கிளை நுனியில் நுனிவளர் பூந்துணர். துணர்க்காம்பில் இதன் மலர்கள் அடுக்கடுக்காக உண்டாகும். |
மலர் | : | மங்கிய வெண்ணிறமானது. துளசி மலரை ஒத்தது. |
புல்லி வட்டம் | : | 4 அகவிதழ்களும் இணைந்து, பசிய குவளை வடிவாக இருக்கும். இதற்குள் நுண்மயிர் அடர்ந்திருக்கும். |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் போன்றும், மடல்கள் மேலே இரு உதடுகளைப் போன்று வாயவிழ்ந்தும் இருக்கும். |
மகரந்த வட்டம் | : | இரு மகரந்தத் தாள்கள் உயரமாகவும், மற்ற இரு தாள்கள் குட்டையாகவும் இருக்கும். |
சூலக வட்டம் | : | 2 செல் உடையது. எனினும், நான்கு ‘நட்லெட்’ என்ற உலர் கனி. |
கனி | : | நான்கும் சிறியவை. மிக நுண் குழிகள் காணப்படும். வழவழப்பானவை. |
இச்செடியின் இலைகளில் நறுமணமிருத்தலின், கண்ணி தொடுக்குநர் இதனை இடையிட்டுத் தொடுப்பர். இச்செடி மருந்துக்கு உதவும் என்பர்.
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என்று மார்ட்டன் ஜே.கே. (1952) என்பவரும், 2n = 64 என்று டோயோச்சுக்கி (1936, 1937) என்பவரும் கண்டுள்ளனர்.