பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608

சங்க இலக்கியத்

“. . . . . . . . . . . . . . . . சேரலர்
 . . . . . . . . . . . . . . . .
 சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
 பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

-அகநா. 149 : 7-10
“காலின் வந்த கருங்கறி மூடையும்”-பட்டின. 186


மிளகு—மிரியல்—கறி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
(அல்லியும் புல்லியும் இணைந்தவை)
தாவரத் தொகுதி : மானோகிளைமிடியே
(Monochlamydeae)
மைக்ரெம்பிரையே (Micrembryeae)
தாவரக் குடும்பம் : பைப்பெரேசி (Piperaceae)
தாவரப் பேரினப் பெயர் : பைப்பர் (Piper)
தாவரச் சிற்றினப் பெயர் : நைகிரம் (nigrum)
சங்க இலக்கியப் பெயர் : மிளகு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கறி, மிரியல்
ஆங்கிலப் பெயர் : கரும் மிளகு (Black pepper)
தாவர வளரியல்பு : புதர்க் கொடி. மரங்களில் ஏறிப் படர்ந்து பன்னாள் வாழும். கொடி கருநிறமானது.
தண்டு : இது ஒரு வலிய கொடியாகும். இதன் தண்டில் இரண்டாம் வளர்ச்சியில் அளவுக்கு மீறிய ‘குழாய் முடிகள்’ உண்டாகும். (Anomalous secondary growth)
இலை : தனியிலை. அகன்ற பசிய இலை முட்டை வடிவானது. பளபளப்பானது. தடித்தது.