பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

காழ்வை–அகரு–அகில்
அக்விலாரியா அகலோச்சா
(Aquilaria agallocha,Roxb.)

சங்க இலக்கியங்களில், ‘காழ்வை’ என்று குறிஞ்சிப் பாட்டிலும் (93) ‘அகரு’ என்று பரிபாடலிலும்(12:4) இம்மரம் குறிப்பிடப் படுகின்றது. ‘காழ்வை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் அகிற் பூ என்றும், ‘அகரு’ என்பதற்குப் பரிமேலழகர் அகில் என்றும் உரை கண்டனர்.

சங்க இலக்கியப் பெயர் : காழ்வை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அகரு
பிற்கால இலக்கியப் பெயர் : அகில்
உலக வழக்குப் பெயர் : அகில்
தாவரப் பெயர் : அக்விலாரியா அகலோச்சா
(Aquilaria agallocha,Roxb.)

காழ்வை–அகரு–அகில் இலக்கியம்

குறிஞ்சிக் கபிலர், கூறிய ‘ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை’ (குறிஞ். 93) என்பதில் காழ்வை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘அகிற்பூ’ என்று உரை கண்டார். இது மிகவும் வன்மையான வைரம் பாய்ந்த மரம். இதனாற் போலும் இது இப்பெயர் பெற்றது. இது ஒரு பெரிய, எப்பொழுதும் தழைத்திருக்கும் மரமாகும். இம்மரம் வட இந்தியாவில் இமயமலைச் சாரலில் வளர்கிறது. தமிழ் நாட்டில் இந்நாளில் வளர்வதாகக் குறிப்புகள் காணப்படவில்லை.

சங்க இலக்கியங்களில், ‘காழ்வை’ என்று குறிஞ்சிப் பாட்டிலும் (93) ‘அகரு’ என்று பரிபாடலிலும் குறிப்பிடப்படுகிறது.