பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

615

“பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
 மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்”

-கலி. 9 : 12-13


சந்தன மரம் உயரமாக வளரும். நீரில் கலந்த தேறலை, அறியாது உண்ட கடுவன் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தவித்தது என்றும், சந்தன மரத்தில் மிளகுக் கொடி ஏறிப் படரும் என்றும், இம்மரத்தினால் செய்யப்பட்ட உலக்கையால், ஐவன நெல்லைப் பாறை உரலிட்டுக் குத்துவர் என்றும் புலவர்கள் கூறுவர்.

“. . . . . . . . . . . . விளைந்த தேறல்
 அறியாது உண்ட கடுவன் அயலது
 கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது”
-அகநா. 2 : 4-6

“. . . . . . . . இனவண்டு இமிர்பு ஊதும்
 சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்”

- கலி. 43 : 2-3

சந்தன மரக்கட்டையில் மணமுள்ள சந்தன எண்ணெய் உண்டாகும். மரம் முதிர, முதிர எண்ணெய் மிகுந்து சுரக்கும். இதனால், சந்தனக் கட்டையினைத் தேய்த்து, அரைத்துச் சந்தனக் குழம்பாக்கி, உடம்பில் பூசிக் கொள்வர். மணத்துடன் சந்தனச் சாந்து உடலுக்குக் குளிர்ச்சியும் தரும். இதனைப் புலவர்கள் பாடியுளளனர்.

“நெடுவரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்ப-சிறுபா. வெ. உ.

“திண்காழ் ஆரம் நீவிகதிர் விடும்
 ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின்”
-மதுரை. 715-716
(ஆரம்-முன்னது சந்தனம், பின்னது முத்தாரம்)

“நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலைப. 520

“அரையுற்று அமைந்த ஆரம் நீவி
 புரையப் பூண்ட கோதை மார்பினை”
-அகநா. 100 : 1-2

“மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம்”-கலி. 73 : 13

“வண்டுஊது சாந்தம் வடுக்கொள நீவிய”-கலி. 93 : 1

“ஆரம் நாறும் மார்பினை”-குறுந். 198 : 7

“. . . . . . . . . தன்மலை
 ஆரம் நாறும் மார்பினன்”
-குறுந் 161 : 5-6