இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
640
சங்க இலக்கியத்
ஆலமரத்தின் கிளைகளினின்று விழுதுகள் உண்டாகி, கீழ் தோக்கி வளர்ந்து, மண்ணில் ஊன்றிப் பருத்து, நிழல் பரப்பும் கிளைகளைத் தாங்கி நிற்கும் என்ற உண்மையைப் புலவர்கள் கூறுகின்றனர்.
“. . . . . . . . . . . . கோளி ஆலத்துக்
கொழுகிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்கு”
-புறநா. 58 : 2-3
“பல்வீழ் ஆலம்போல”-அகநா. 70 : 16
“. . . . . . . . . . . .பொரிஅரை ஆலத்து
ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை”
-அகநா. 287 : 7-8
“. . . . . . . . . . . . பெருங்கிளை
பிணிவீழ் ஆலத்து அலங்குசினை ஏறி”
-அகநா. 319 : 1-2
“அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
ஆலமும் கடம்பும்”-பரி. 4 : 66-67
ஆல் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் இவை மானோகிளமைடியே எனப்படும். |
தாவரத் தொகுதி | : | ஆர்டர் அர்டிசிபுளோரே (urticiflorae) |
தாவரக் குடும்பம் | : | மோரேசி (Moraceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பைகஸ் (Ficus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பெங்காலென்சிஸ் (bengalensis) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஆல், ஆலம் |
உலக வழக்குப் பெயர் | : | ஆலமரம் |
தாவர இயல்பு | : | மிகப் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும் பெரிய மரம். |