பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

640

சங்க இலக்கியத்

ஆலமரத்தின் கிளைகளினின்று விழுதுகள் உண்டாகி, கீழ் தோக்கி வளர்ந்து, மண்ணில் ஊன்றிப் பருத்து, நிழல் பரப்பும் கிளைகளைத் தாங்கி நிற்கும் என்ற உண்மையைப் புலவர்கள் கூறுகின்றனர்.

“. . . . . . . . . . . . கோளி ஆலத்துக்
 கொழுகிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்கு”

-புறநா. 58 : 2-3
“பல்வீழ் ஆலம்போல”-அகநா. 70 : 16
“. . . . . . . . . . . .பொரிஅரை ஆலத்து
 ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை”

-அகநா. 287 : 7-8
“. . . . . . . . . . . . பெருங்கிளை
 பிணிவீழ் ஆலத்து அலங்குசினை ஏறி”

-அகநா. 319 : 1-2
“அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
 ஆலமும் கடம்பும்”
-பரி. 4 : 66-67

ஆல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
இவை மானோகிளமைடியே எனப்படும்.
தாவரத் தொகுதி : ஆர்டர்
அர்டிசிபுளோரே (urticiflorae)
தாவரக் குடும்பம் : மோரேசி (Moraceae)
தாவரப் பேரினப் பெயர் : பைகஸ் (Ficus)
தாவரச் சிற்றினப் பெயர் : பெங்காலென்சிஸ் (bengalensis)
சங்க இலக்கியப் பெயர் : ஆல், ஆலம்
உலக வழக்குப் பெயர் : ஆலமரம்
தாவர இயல்பு : மிகப் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும் பெரிய மரம்.