பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

641

தாவர வளரியல்பு : மீசோபைட். எல்லாவிடங்களிலும் வளர்கிறது. இதன் பழத்தை உண்ணும் காக்கையின் எச்சத்தில், இதன் விதைகள் இருக்கும். அவை பிற மரங்களின் மேலே முளைத்து அல்லது பிற மரங்களைத் தழுவி வளருவதும் உண்டு.
இலை : தனி இலை. பளபளப்பானது. தடித்தது. நீள்.முட்டை வடிவானது. 4.8" X 2.5" இலைக் குருத்தை மூடி, இரு இலைச் செதில்கள் உள.
மஞ்சரி : இலைக்கோணத்தில் ஒன்று முதல் இரண்டு அங்குல உருண்டை வடிவான பசிய இளங்காயின் உள்ளிடத்தே சுவர்களில் பல பூக்கள் உண்டாகும். இதுவே இதன் பூவிணராகும். தமிழ் இலக்கியத்தில் இதனைக் கோளி என்று கூறுவர். தாவிரவியலார். இதனை ஹைபந்தோடியம் (Hypanthodium) என்று கூறுவர்.
மலர் : இதனை ரிசப்டகிள் (Receptacle) என்றுரைப்பதுமுண்டு. இதே பொருள் கொண்ட சங்க இலக்கியச் சொல் “கோளி” என்பதாகும். மலர்களைத் தன்னகத்தே கொண்டிருத்தலின், கோளி எனப்பட்டது. இதற்கு அடியில் இரு மலரடிச் செதில்கள் உள்ளன. இதனுள் ஆண் மலர்களும், பெண் மலர்களும் காயின் உட்சுவரில் ஒட்டியிருக்கின்றன. ஆண் மலர்கள் மேற்பகுதியில் உள்ளன.
ஆண் மலர் : இம்மலரின் புல்லியும், அல்லியும் இணைந்து, 2 பீரியாந்த் (Perianth) என்ற இதழ்கள் உள்ளன. ஒவ்வொரு மலரிலும், 5 நேரான மகரந்தக் கால்கள் உள்ளன. மகரந்தப் பையிலிருந்து தாது முதிர்ந்து, அடியில் உள்ள பெண் மலரின் சூல்முடியின் மேல் விழும்.
 

73-41