பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

648

சங்க இலக்கியத்

“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்” -மதுரை. 527
“நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல்” -குறிஞ். 189
“புடைத்தொடுபு உடையூப் பூநாறு பலவுக்கனி
 காந்தளஞ் சிறுகுடி கமழும்”
-குறுந். 373  : 6-7
“பலவில் சேர்ந்த பழமார் இனக்கலை” -குறுந் 385 : 1
“பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்” -பதிற். 61 : 1
(அரியல்- தேன்)

பாரியின் பறம்பிலே உழவர் உழாத நான்கு பயன்கள் உண்டென்று கூறிய கபிலர், பலவின் பழத்தை இரண்டாவது பயனாகக் கூறுவர்.

“இரண்டே தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே”
-புறநா. 109 : 5


பலா மரத்தின் தொடர்பான நற்றிணைப் பாடலொன்று சுவையான உள்ளுறை உவமங் கொண்டுள்ளது. இதனைப் பாடியவர் மதுரை மருதன் இளநாகனார். இப்பாடல் தோழி, தலைவனை நோக்கித் தலைவியைக் கடிமணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டுவதாக அமைந்துள்ளது.

பலாமரத்தின் கிளைகளில், கொழுவிய சுளைகளையுடைய பழங்கள் பருத்துத் தொங்குகின்றன. அவற்றைக் கவரக் குரங்கும் வந்துளது. பழங்களின் பளுவைத் தாங்க மாட்டாமல், பலவின் கிளைகள் வளைந்துள்ளன. அக்கரிய கிளைகளில் கொக்கு ஒன்று, மீனைக் கொணர்ந்து அதனைக் குடைந்து தின்னுகிறது. அதனால் உண்டாகிய புலவு நாற்றத்தைப் பொறுக்கவியலாத பெண் குரங்கு தும்மா நிற்கும். இத்தன்மையான “வளம் மிக்க நாடனே! வண்டுகள் விரும்புகின்ற அழகுடைய எமது பொழிலின் கண் யாங்கள் நண்ணாநிற்பு நீயும் வருகின்றாய். ஆண்டுறையும் வண்டுகள், எங்கள் கண்ணிணைகளை மலரெனக் கருதித் தேன் நுகர அணுகி வருதற்குக் காரணமான இவள் கண்களில் பீர்க்கின் பழம்பூ போன்ற பசலை உண்டாகா நிற்கும். இதனை நினக்குச் சொல்லவும் யான் நானுவன். ஆதலின் இவளுக்கு இத்தகைய துன்பம் வராமற் காப்பாயாக!” என்று கூறுகின்றாள்.

“கொழுஞ் சுளைப்பலவின் பயங்கெழு கவாஅன்
 செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின்