பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

வாழை
மூசா பாரடைசியாக்கா—சாப்பியென்டம்
(Musa paradisiaca,Linn. var. sapientum)

உலகில் தொன்று தொட்டு வளர்ந்து இனிய பழம் நல்கும் வாழைச் (மரம்) செடியைச் சங்க நூல்கள் ‘வாழை’ எனவே குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : வாழை
தாவரப் பெயர் : மூசா பாரடைசியாக்கா—சாப்பியென்டம்
(Musa paradisiaca,Linn. var. sapientum)

வாழை இலக்கியம்

நந்தமிழ் நாட்டின் தலை சிறந்த முக்கனிகளுள் (வாழை, மா, பலா) ஒன்றானது வாழை. இதில் பூவன், மொந்தன், பேயன் என்ற மூவகையான வாழைப்பழங்கள் முறையே அயன், அரி, அரன் மூவர்க்கும் உரியன என்பர். வாழைக்காய், கனி, தண்டு, இலை முதலிய அனைத்தும் பயன்படும் பொருள்கள். இதன் கிழங்கு, நடுத்தண்டு முதலியவை மருந்துக்குதவும். அயல் நாடுகளில் வளரும் ஒரு சில வாழையின் கனிகள் நோய் செய்தலும் உண்டு.

சோழ நன்னாட்டின் வளத்தையும் வனப்பையும் பாடும் முடத்தாமக் கண்ணியார்

“கோள் தெங்கின் குலை வாழை” -பொருந. 208

என்று குறிப்பிட்டார். இதே சோழ நாட்டின் சிறப்பினைக் கூற வந்த உருத்திரங்கண்ணனார்

“கோள் தெங்கின் குலை வாழை” -பட். பா. 19