பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

காந்தள்
குளோரியோசா சுபர்பா (Gloriosa superba, Linn.)

‘ஒண்செங்காந்தள்’ என்றும், ‘சுடர்ப் பூந்தோன்றி’ என்றும்; ‘கோடல்’ என்றும் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் காந்தள் ஒரு சிறு ஏறுகொடி. பச்சைநாவி எனப்படும் கிழங்கைத் தரைக்கு அடியில் கொண்டது. இலைகள் அகன்று நுனி குறுகி, பற்றுக் கம்பியாக மாறிச் சுருண்டு இருக்கும். மிக அழகான பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : காந்தள்
தாவரப் பெயர் : குளோரியோசா சுபர்பா
(Gloriosa superba,Linn.)

காந்தள் இலக்கியம்

காந்தள் கொடிக்கு, தோன்றி, கோடல், என்ற வேறு பெயர்களும் கூறப்படுகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியர் தாமெழுதிய உரைகளிலெல்லாம் காந்தள் என்பதற்குக் ‘காந்தள்பூ’ என்றும் (கலி. 45), ‘வெண்கோடல்’[1] என்றும் (பெரும்பா. 372); (மலைபடு. 519) செங்காந்தள் என்பதற்குச் ‘சிவந்த கோடற்பூ’ என்றும் (குறிஞ். 62) கோடல் என்பதற்குச் ‘செங்காந்தள்’ என்றும் (கலி.101); ‘கோடற்பூ’ என்றும் (கலி.103); ‘வெண்கோடற்பூ’ என்றும் (குறிஞ். 83), ‘தோன்றி’[2] என்பதற்குத் ‘தோன்றிப்பூ’ என்றும் (முல்லைப். 86) உரை கூறியுள்ளார்.

பெருங்குறிஞ்சி எனப்படும் குறிஞ்சிப் பாட்டினுள் குறிஞ்சிக் கபிலர் ஒண்செங்காந்தள் (62) எனவும் கோடல் (83) எனவும் சுடர்ப்பூந்தோன்றி (90) எனவும் தனித்தனியாகப் பிரித்தே பாடுகின்றார். பரிபாடலில் நல்லந்துவனார்,


  1. வெண்கோடல்: சீவக. சிந், 17
  2. தோன்றிப்பூ: சீவக. சிந். 73:1563