பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மகரந்தத் தாள்கள் : எண்ணற்ற இதழ் போன்ற மகரந்தத் தாள்களுடன் சிறிய, உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும். 3 சூலிலைகள் இணைந்து பல அறைகள் கொண்ட சூற்பையாக இருக்கும்.
சூல்கள் : அதிகமானவை, அனட்ரோபஸ் வகையிலானவை

இது நீலோற்பலம் என்று கருதப்பட்டுத் தில்லைக் கோயிற் புறத்திலுள்ள குட்டையில் வளர்க்கப்பட்டிருந்தது. நீலோற்பல மலரின் அகவிதழ்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும், புறவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். மேலும், இது செங்கழுநீர் எனவும் குவளை எனவும் வழங்கப்படும். இதனைப் பற்றிய விளக்கங்களைக் குவளை என்ற தலைப்பில் காணலாம்.