பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

685

வேர்த் தொகுப்பு : வெண்மையான, பருத்த, கிளைத்த கிழங்கு கொண்டிருக்கும்.
கிழங்கு : பச்சை நாவி எனப்படும். கலப்பை வடிவமாகவும் இருத்தலின், காம்பிள், அரங்காச்சாரி முதலியோர் இத்தாவரத்திற்குக் கலப்பைக் கிழங்கு என்பர். கிழங்கில் கால்சிசின் (Colchicine) என்னும் கொடிய நச்சுப் பொருள் உள்ளது.
வேர்கள் : சற்றுத் தடித்து, நீண்டுள்ள சல்லி வேர்த் தொகுதி பல வேர்களையும் உடையது.
தண்டு : வலியுடையதன்று. இலை அமைப்புள்ளது.
இலை : 8 முதல் 18 செ.மீ. வரை நீளமான குத்து வாள் வடிவானது. அடியில் அகன்று, வரவரக் குறுகி, நுனி நடுநரம்புடன் பற்றுக் கம்பியாகச் சுருண்டு, பற்றிக் கொண்டு வளரப் பயன்படும். இலையடித் தண்டில் ஏறக்குறைய நேரடியாக மாற்றடுக்கு முறையில் ஒட்டியிருக்கும். நடு நரம்புடையது. பளபளப்பான, பச்சை நிறமுடையது.
பூக்கும் காலம் : கார்த்திகைத் திங்கள் (செப்டம்பர்–அக்டோபர்). இதனால் கார்த்திகைப் பூ என்றும் வழங்குவர்.
இணர் அல்லது மஞ்சரி : மலர்க் காம்பு இலைக் கோணத்தில் தோன்றும், காம்பு 10 முதல் 18 செ.மீ. வரை நீண்டு தடித்தது. மஞ்சரி தனி மலர் உடையது.
மலர் : பெரியது. இருபால் பூ. மூவங்கப் பூ கீழ்ச் சூலகப்பூ, பூக்காம்பில் நுனி பின்புறமாக நேர் கோணத்தில் வளைந்திருக்கும். முகை 8 முதல் 10 செ. மீ வரை நீளமுள்ளதாய், அடியிற் சற்று பருத்தும், நுனி சிறுத்தும்,