பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

686

சங்க இலக்கியத்

இருக்கும். இதனால் துடுப்பு எனப்படும். அரும்பு புறத்தில் பச்சையாகவும், போதாகுங்கால் மஞ்சளாகவும் தோன்றும். பூவின் புறவிதழ் அடுக்கும், அகவிதழ் அடுக்கும் (அல்லி) தனியாக இல்லாமல், ஒன்றாக இணைந்திருக்கும். இதற்குப் பூவுறை என்று பெயர். இவ்வியல்பு காந்தளைப் போன்ற ஒரு வித்திலைத் தாவரப் பூக்களில் பெரிதும் உள்ளது. பூவுறை ஆறு தனித்த இதழ்களாக உள்ளது. வெளிப்புறம் மலர்வதற்கு முன் பொன்னிறமாகவும், உட்புறம் குருதிச் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
பூவுறையும் மலரும் : பூவுறை ஆறு பிரிவானது; நிலையானது. பிரிந்தது; அவை விரிந்தோ, பின்புறம் வளைந்தோ காணப்படும். இதழ் விளிம்பு அலை வடிவானது. நெளிந்து தோன்றும். 6 இதழ்களின் அடிப்புறம் பொன் மஞ்சள் நிறம். நுனி குருதிச் சிவப்பானது.
மலர் நிறம் : மலர்கள் முதலில் பச்சை நிறமாகத் தோன்றி, மஞ்சள் நிறமாக மாறிப் பின்னர் தீ நிறமாகி, குருதிச் சிவப்பு நிறமாகவும், கிரிம்சன் நிறமாகவும் மாறும்.
மகரந்தத்தாள் வட்டம் : 6 மகரந்தத் தாள்கள்; சூலக அடித் தளமுடையன. தாள்கள் மெல்லிய இழை போன்றவை. மகரந்தப் பைகள் நீளமானவை. பின்புறம் ஒட்டியவை. சுழல் அமைப்பில் வெளி நோக்கித் தாதுகும். தாது மஞ்சள் நிறமானது.
சூலகம் : சூற்பை மூன்று அறை கொண்டது; பல சூல்கள் உண்டு. சூல் தண்டு இழை போன்றது. பின்புறம் வளைந்தது. சூல்முடி 3 பிளவுள்ளது. உள்ளடங்கியது.