பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

தாமரை
நிலம்பியம்‌ ஸ்பீசியோசம்‌
(Nelumbium speciosum, Willd.)

தாமரை எனவும் கமலம் எனவும் சங்க நூல்கள் கூறும். நன்னீர்க் கொடியில் மலரும் தாமரையில் இருவகை உண்டு. செவ்விய இதழ்களை உடையது செந்தாமரை. தூய வெண்மையான இதழ்களை உடையது வெண்தாமரை. இவையிரண்டும் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தாமரை மலரைத் ‘தெய்வ மலர்’ என்று கூறுவர் கோவை. இளஞ்சேரனார்.[1] சிறுபாணாற்றுப்படை (73) இதனைத் ‘தெய்வத்தாமரை’ என்று கூறுமாறு கொண்டு.

சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
தாவரப் பெயர் : நிலம்பியம் ஸ்பீசியோசம்
(Nelumbium speciosum)
ஆங்கிலப் பெயர் : சேக்ரட் லோடஸ் (Sacred lotus)


தாமரை இலக்கியம்

சிறுபாணாற்றுப்படை தாமரையைத் ‘தெய்வத்தாமரை’ 73 என்று கூறுகின்றது.

எண்ணில் பெருந் தொகைக்கும் ஈடற்றதென விளங்கும் குறுந்தொகையில், கடவுள் வாழ்த்துப் பாடல் முருகப் பெருமானைப் பற்றியதாகும். பெருமானுடைய விருப்பம் மருவிய செம்மையாகிய திருவடி தாமரை மலரைப் போன்று அழகியது என்று தாமரை மலரை உவமையாகக் கூறுவார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.


  1. இலக்கியம் ஒரு பூக்காடு: பக். 217