பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பனை
பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்
(Borassus flabellifer,Linn.)

சேரமன்னர்களின் குடிப்பூ பனை என்பர். பனையைப் போந்தை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும். பனைமரம் மரமன்று. அது ‘புல்லெனப்படும்’ என்பர் தொல்காப்பியர். இது புறக்காழ் கொண்டது. பனையில் ஆண் மரமும், பெண் மரமும் தனித்தனியாக வளரும். இரு வகை மரங்களும் பல்லாற்றானும் பயன்படுமாயினும் ஆண்பனை, பெண்பனையைப் போன்று அத்துணைப் பயன்தர வல்லதன்று.

பெண் பனை மரத்தில் இறக்கும் கள்ளிற்குப் ‘பதநீர்’ என்று பெயர். இதனைக் காய்ச்சிப் பனை வெல்லம், பனங்கற்கண்டு முதலியவற்றைப் பெறலாம். பனைமரம் பல்லாற்றாலும் பயன்படுவது.

சங்க இலக்கியப் பெயர் : பனை
ஆங்கிலப் பெயர் : பனைமரம் (Palmyra
தாவரப் பெயர் : பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்
(Borassus flabellifer,Linn.)

பனை இலக்கியம்

சேர மன்னரது குடிப்பூவாகப் பனையின் பூ கொள்ளப் பட்டது. ‘பனை’ ‘போந்தை’ என்ற இதன் வேறு பெயர்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியத்தில் இவற்றுடன் ‘பெண்ணை’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

 

73–45