பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

708

சங்க இலக்கியத்

இவ்வடிகளுக்குக் “கிழித்துக் குறுக நறுக்கி, வாகையொடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து, முல்லை முகைக்கு ஒப்பாகவும் வாகை வீ அம்முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும்” உவமம் கொண்டதை இதன் உரைகாரர் விளக்கியுள்ளார்.

பனையிலையின் காம்பு தடித்து, சற்று பட்டையாக இருக்கும். இருமருங்கும் கரிய வாள் போன்ற விளிம்புமிருக்கும். இம்மட்டைகளைக் கொண்டு, குதிரை வடிவாகக் கட்டிய ‘மா’வில் ஏறி ஊர்ந்து செல்லுதல் மடலூர்தல் எனப்படும். தான் விழைந்த மகளை மணங் கொள்ள வேண்டி, தலைமகன் மடலூர்ந்தாயினும் மணங்கொள்ளுதல் வழக்கம். இதனைப் பெருந்திணை என்றும், ஏறிய மடல் திறம் என்றும் கூறும் தொல்காப்பியம். {தொல். பொரு. 54)
பனை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : பொராசஸ் (Borassus)
தாவரச் சிற்றினப் பெயர் : ஃபிளாபெல்லிஃபர் (flabellifer)
சங்க இலக்கியப் பெயர் : பனை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : போந்தை, பெண்ணை
பிற்கால இலக்கியப் பெயர் : தாலம், புற்பதி, தாளி, புற்றாளி
உலக வழக்குப் பெயர் : பனை, பனைமரம்.
தாவர இயல்பு : மரம் மிக உயர்ந்து பருத்துக் கிளைக்காது வளரும். புறத்தில் காழ் கொண்டு இருக்கும்.