பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

709

இலை : தனியிலை. அங்கை போன்று அகன்றது. இலை விளிம்பு பல பிளவுகளை உடையது
இலைக் காம்பு : .தடித்தது. நீளமானது. இரு புறத்தும், கரிய, கூரிய வாள் போன்றது. பனை மட்டை எனப்படுவது. இதில் வலிய நார்த் திசு நிறைந்திருக்கும்.
மஞ்சரி : வலிய ‘ஸ்பாடிக்ஸ்’ எனும் பாளையுள் காணப்படும். ஆண் பனையுள் ஆண் பூக்கள் தடித்துக் கிளைத்து, நீண்ட கதிர்களில் ஒட்டியிருக்கும். பெண் மரத்தில், பெண் பூக்கள் வலிய பாளையுள், தடித்த பூந்துணரில் உண்டாகும். இதில் உள்ள பெண் பூக்களைக் குரும்பை என்பர். இவை கொழுவிய உருண்டை வடிவானவை.
மலர் : ஆண் பூக்கள் மிகச் சிறியவை. பெண் பூ குரும்பையாக வளரும். ஆண் பூவில் 3 குறுகிய, மெல்லிய புறவிதழ்கள் இருக்கும்.
புல்லி வட்டம் : பெண் பூவில் 3 தடித்த, வலிய, புறவிதழ்கள், குரும்பையில் தழுவி ஒட்டியிருக்கும்.
அல்லி வட்டம் : ஆண் பூவில் 3 அகவிதழ்கள்; 6 மகரந்தத் தாள்கள். காணப்படும். 3 முள் போன்ற மலட்டுப் ‘பிஸ்டிலோட்’ காணப்படும். பெண் பூவில் 3 சிறிய அகவிதழ்களும், 6-9 மலட்டு மகரந்தங்களும் காணப்படும்.
சூலக வட்டம் : சூற்பை உருண்டையானது. 3 - 4 செல்லுடையது. சூல் நேரானது. சூல்முடி 3 பிளவாகச் சூற்பையில் ஒட்டியிருக்கும்.
கனி : சதைக்கனி-ட்ரூப் எனப்படும். 1-J ‘பைரீன்’ விதைகளை உடையது.