பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



721

“. . . . . . . . . . . . சேம்பின்
 முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர்”
-பெரும்பா. 361-362
“சிலம்பின் சேம்பின் அலங்கல் வள்இலை” -குறுந். 76 : 3

சேம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : நூடிபுளோரே (Nudiflorae)
தாவரக் குடும்பம் : ஆரேசி (Araceae)
தாவரப் பேரினப் பெயர் : டைபோனியம் (Typhonium)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளாஜெல்லிபார்மி (flagelliforme)
சங்க இலக்கியப் பெயர் : சேம்பு
தாவர இயல்பு : பல்லாண்டு வாழக் கூடிய, ஆனால், ஓராண்டில் முதிரும் செடி. 2-3 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும்; அடியில் கிழங்கு இருக்கும். இதுவே இதன் தரை மட்டத் தண்டாகும்.
இலை : அகன்ற நீண்ட முக்கோணமான மூன்று பிளவுடைய பெரிய இலை. 1-7 அங். நீளமும் 6 அங். அகலமும் உடையது. இலைக் காம்பு 4-12 அங். நீளமானது.
மஞ்சரி : நீண்ட வாள் போன்ற வடிவுள்ள பாளை போன்ற மெல்லிய உறையினுள் மஞ்சரி உண்டாகும். பாளையின் நுனி கூரியது. மஞ்சரி முதிரும் போது பாளை உதிர்ந்து விடும். மஞ்சரிக்கு ஸ்பாடிக்ஸ் குலை என்று பெயர். கலப்பு மஞ்சரியில், ஆண் மலர்களும், பெண் மலர்களும் தனித் தனியாக உண்டாகும். மலட்டு
 

73-46